நாட்டில் வீதி விபத்துக்கள் திடீரென அதிகரிப்பு; ஒரே நாளில் 10 பேர் பலி

நாட்டில் திடீர் விபத்துக்கள் அதிகரித்துள்ளதகாவும் ஒரே நாளில் மட்டும் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர், பலியானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (30) திகதி நிலவரப்படி இவ்வாறு இத்தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா - நீர்கொழும்பில் பாதசாரிகள் இருவரை லொறியொன்று மோதியதில் இருவரும் பலியாகினர்.

மூன்று வயது ஆண் குழந்தையும், அவரின் 29 வயதான தந்தையுமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். கண்டி - கம்பளையில் பஸ்சொன்று மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். பஸ்சை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்டவேளையில், இவர் விபத்துக்குள்ளானார்.

குருநாகல் - குளியாப்பிட்டியில் காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில், ஓட்டோ சாரதி மரணமடைந்தார். 42 வயதான குடும்பஸ்தரே இதில் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் - ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வான் மோதியதில், பாதசாரி ஒருவர் மரணமடைந்துள்ளார். 68 வயதான வயோதிபரே இதில்,உயிரிழந்தார்.

கொழும்பு - வெள்ளவத்தையில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர பகுதியில் வான் விபத்துக்குள்ளானதில் 76 வயதான பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இந்த விபத்தில் பெண்ணொருவரும், ஆணும், இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர். களுத்துறை - பாணந்துறையில் ஓட்டோ கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

33 வயதான முசக்கர வண்டிசாரதியும், அதில் பயணித்த 41 வயதான பெண் ஒருவருமே இவ்விபத்தில் உயிரிழந் தனர். மொனராகலை - வெல்லவாயவில் வான் மோதியதில், பாதசாரி ஒருவர் மரணமடைந்தார். 72 வயதான வயோதிபரே உயிரிழந்தவராவார்.


Add new comment

Or log in with...