யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்கு அருகேயுள்ள பழக்கடைக்குள் புகுந்த வாள் வெட்டுக் குழுவொன்று, அங்கிருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் இதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்விரோதம் காரணமாகவே இந்த வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனவும் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.விசேட நிருபர்
Add new comment