உடதியலும பகுதியில் முகாமிட்டிருந்த ஜோடி மீது யானை தாக்குதல்; யுவதி பலி

- 22 வயது நபர் சம்பவத்தில் படுகாயம்

கொஸ்லந்த, உடதியலும பகுதியில் நேற்றிரவு (11) வந்து முகாமிட்டிருந்த தம்பதியினர் மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றைய நபர் பிரதேசவாசிகளால் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

தாதி மாணவியான உயிரிழந்த யுவதி அடுத்த வாரமளவில் தாதி நியமனம் பெறவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளாகி கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய நபரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...