- ஏப்ரல் 15ஆம் திகதிக்குள்
- எரிபொருள் நிலையங்கள் பண்டிகை காலத்துள் 50% கையிருப்பை வைத்திருக்க வேண்டும்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் பவுசர்களுக்கும் எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் GPS
கண்காணிப்பு கட்டமைப்பு பொருத்தப்படுமென, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முதலில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பவுசர்களுக்கு GPS அமைப்பு பொருத்தப்படும். அதன் பின்னர், அனைத்து தனியார் பவுசர்களுக்கு அவை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவர் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலம் என்பதால் அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% சேமிப்புக் கொள்ளளவை பராமரிக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலேயே தனது டுவிட்டர் பதிவில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை நடத்தப்பட்ட முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் சேமிப்புத் திட்டம், சுத்திகரிப்புச் செயல்பாடுகள் மற்றும் பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விநியோகம் ஆகியவை மதிப்பாய்வு செய்யப்பட்டன.
Add new comment