மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன், காலி முகத்திடலுக்கு அருகில் நடைபெற்ற 'கோட்டா கோ கம' போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிட்டு கைது செய்து வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (27) அழைக்கப்பட்டபோதே அதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.
Add new comment