நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

- சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (24) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல், வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...