- வடக்கு, கிழக்கு, ஊவா பகுதிகளில் அவ்வப்போது மழை
- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை
இலங்கைக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டு இருந்த தாழமுக்கம் நேற்றிரவு (02) குறைந்த அழுத்த வலயயமாக மாறி, நாட்டை விட்டு வெளியேறி பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்றையதினம் (03) நாட்டின் வானிலையின் தாக்கம் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
தென் மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல், ஊவா, தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Add new comment