பிணையில் விடுவிக்கப்பட்ட கொலை சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

- வீட்டிற்குள் புகுந்து சுட்டுவிட்டு தப்பியோட்டம்

பேலியகொடை, களுபாலம பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் வைத்து இன்று (17) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் 32 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவபர் ஒரு சில கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, ஒரு சில வாரங்களுக்கு முன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...