வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் பஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (04) இரவு பூர் கர்ஹால் மாவட்டத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த பஸ்ஸினுள் குறைந்தது 40 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் திருமண வைபவம் ஒன்றில் பங்கேற்கும் குழு ஒன்று இருந்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து இரவு முழுவதும் மீட்பு நடவடிக்கை இடம்பெற்றது. புதன்கிழமை காலையிலும் கூட மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் மாநில அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதிப் பாதுகாப்பு இந்தியாவில் மோசமாக இருப்பதோடு மோசமான முறையில் வாகனத்தை ஓட்டுவது மற்றும் சிதைவடைந்த வீதிகளால் ஏற்படும் விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் அங்கு 100,000க்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
Add new comment