Saturday, September 24, 2022 - 9:16am
பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பாகி சிறையிலடைக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு அப்போதய ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நேற்று (23) இடம்பெற்றது.
இதன்போது இந்த விசாரணையை நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Add new comment