நாளை சனிக்கிழமை (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், மு.ப. 10.30 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஓகஸ்ட் 20: 3 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- மு.ப. 10.30 - பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
- பி.ப. 6.00 - பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
<<மின்வெட்டு அட்டவணை ஓகஸ்ட் 20.pdf>>
<<பிரதேசங்கள்.pdf>>(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)
Add new comment