தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
தனியார் பஸ் சேவைகளை இன்று திங்கட்கிழமை முதல் முழுமையாக சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தனியார் பஸ்களை இன்று முதல் முழுமையாக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதே வேளை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஐந்து தினங்களுக்கு நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை பஸ் சேவைகளையும் வழமை போன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களையும் வழமை போன்று 5 தினங்களுக்கு கடமைக்கு அழைப்பதற்கான தீர்மானத்தை பொது நிர்வாக அமைச்சு மேற்கொண்டுள்ள நிலையில் அரசாங்க ஊழியர்களின் போக்குவரத்தை கருத்திற்கொண்டு முழுமையான அளவில் பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment