SWRD பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றதாக நால்வர் கைது

பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை வாசிக்கும் இளைஞர்கள்... (படம்: சுலோச்சன கமகே)

காலி முகத்திடல் S.W.R.D. பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவை மீறி குறித்த பகுதியில் நின்றிருந்தமை காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் SWRD பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் உட்பிரவேசிப்பதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஜூலை 20ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...