நாளை சனிக்கிழமை (02) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், நாளை ஜூலை 02 மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 03 ஆகிய தினங்களில் மு.ப. 10.20 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையில் 2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஜூலை 02 - 03: 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- மு.ப. 10.20 - பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
- பி.ப. 6.00 - பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
<<மின்வெட்டு அட்டவணை ஜூன் 27-ஜூலை 03.pdf>>(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)
Add new comment