வடக்கில் கடமைக்காக எரிபொருள் பெறுபவர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்

- வடக்கு ஆளுநர் ஜீவன் கடும் உத்தரவு

வடக்கில் தமது கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாரதி காப்பாளர்கள் தாம் கடமைக்கு செல்வதற்குரிய எரிபொருளை புதிய தரப்பினர் தமக்கு பெற்றுத் தரவில்லை என நடத்திய ஊடக சந்திப்பை அடுத்து ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமது கடமைகளை காரணங்காட்டி எரிபொருளை பெற்றவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...