- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் CID யில் வாக்குமூலம்
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மே 09 இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் தேவையற்ற தலையீடுகளை தடுக்கும் வகையில் குறித்த நடவடிக்கையை எடுக்குமாறு அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) தற்போது வாக்குமூலம் வழங்கி வருகின்றார்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment