கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எவரும் ஏற்க மாட்டார்கள் என கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று (13) தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வகிக்கும் பெரும்பான்மை பாராளுமன்றத்தில் இல்லை எனவும், முடிந்தால் பாராளுமன்றத்தில் அவர் பெரும்பான்மையை காட்டுமாறு சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Add new comment