நிதியமைச்சர் சப்ரி தலைமையில் பிரதிநிதிகள் குழு அமெரிக்கா பயணம்

இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்காவின் வொசிங்டன் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக குறித்த குழுவினர் பயணமாகவுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை 5 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். எம் சிறிவர்தன ஆகியோரே இவ்வாறு பயணமாகவுள்ளனர்.


Add new comment

Or log in with...