Friday, April 8, 2022 - 2:50pm
(File Photo)
மிகைக்கட்டண வரி சட்டமூலம் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று (07) நிறைவேற்றப்பட்ட மிகைக்கட்டண வரி சட்டமூலத்துக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (08) சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் அண்டு 14ஆம் இலக்க மிகைக்கட்டண வரி சட்டமாக இன்று (08) முதல் நடைமுறைக்கு வருகிறது.
மிகைக்கட்டண வரி சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
Add new comment