Tuesday, March 2, 2021 - 11:44am
கொவிட்-19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்காக, கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட, இரணைதீவை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று (02) கொழும்பிலுள்ள, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட, தொழில்நுட்ப குழுவினால் குறித்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Add new comment