வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விசேட படிவம்

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விசேட படிவம்-Special Form at BIA Who Arrives From Abroad

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும்  பயணிகள் அனைவருக்கும் இன்று (31) முதல் விசேட படிவமொன்று வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளமை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில தகவல்களை பெறும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது வரை குறித்த படிவம், சீனாவிலிருந்து வருவோருக்கு மாத்திரம் வழங்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (31) முதல் வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜா சிங்க தெரிவித்தார்.

இன்று (31) பிற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...